எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிட்ட விடுதலைப் புலிகள்!!

news5c20065c95cimages5cnewsnew_ltte_logo_colomboஎதிர்த்தரப்பினர் கையாண்ட தந்திரோபாயங்கள் மற்றும் அவர்களிடம் ஏற்பட்ட மாறுதல்களை விடுதலைப் புலிகள் அமைப்பு அறிந்துகொள்ளாமையே அவர்களுக்குப் பின்னடைவு ஏற்படக் காரணமாகவிருந்தது என இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான மாவோயிஸ்ட் அமைப்பு கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் எதிரிகளைக் குறைத்து மதிப்பிட்டதுடன், தமது பலம்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள 16 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் ஏற்பட்ட அனுபவம் எமக்கு மிகவும் முக்கியமானது. அதிலிருந்து நல்லதொரு படிப்பினையைப் பெற்றுள்ளோம். விடுதலைப் புலிகள் எதிரியின் உத்திகள், பலம், சர்வதேச ஆதரவு, சக்திவாய்ந்த நாடுகளின் ஆதரவு போன்றவற்றை அறிந்துகொள்ளாததுடன், எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மேற்குவங்கப் பகுதியிலுள்ள கிராமமொன்றைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த புரட்சிக் குழுவான மாவோயிஸ்ட் அமைப்பு, அங்கு ஆட்சியமைத்திருந்த கொமியூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கி சேதப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பை இந்திய மத்திய அரசாங்கம் தடைசெய்திருந்தது.

ஜனாதிபதி தலைமையில் கூடவிருக்கும் சர்வகட்சிக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்கிறது

tna_2 நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் கூடவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ளவுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெறவுள்ள சர்வகட்சிக் குழுவின் முதலாவது கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்ளவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் தேர்தல்க் கடமைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு சென்றிருப்பதாலும், கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் தங்கியிருப்பதாலும் கொழும்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் எம்மிடம் கூறினார். எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் இந்த சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்றைய சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளன. எனினும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதா இல்லையா என்பது பற்றி ஜே.வி.பி. இதுவரை தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவில்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிரியர் போட்டிப்பரீட்சை 2007 இல் கலந்து கொள்ள முடியாமற் போன பட்டதாரிகள் அமைச்சருடன் சந்திப்பு

dicree0107a_1 ஆசிரியர் போட்டிப்பரீட்சை 2007 இல் கலந்து கொள்ள முடியாமற் போன 68 யாழ் மாவட்ட பட்டதாரிகள் தமக்கான ஆசிரியர் பதவி நியமனம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பட்டப்படிப்புக்களை 2000 ஆம் ஆண்டின் பின்னர் வௌ;வேறு காலங்களில் நிறைவு செய்துகொண்ட இப்பட்டதாரிகள் நாட்டின் சீரற்ற அரசியல் நிலமைகளால் பெரும் பாதிப்பை எதிர் கொண்டிருந்தமையை பற்றியும் அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். அவர்களது நிலமைகளினை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் இது தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் எதிர்வரும் யாழ் மாநகர சபைத் தேர்தலின் பின்னர் மீண்டும் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்;துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது எங்கள் தேசம்! எங்கள் அரசு!

kaladdy2906c பொலிசாருக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்திற்கு மிடையே தோன்றிய பிணக்கை தீர்ப்பதற்கான சந்திப்பிற்கு இன்று தலைமை தாங்கி பேசும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டர். யாழ் பஸ் நிலையப்பகுதியில் முச்சக்கரவண்டிகளை நிறுத்தி சேவையில் ஈடுபடுவது தொடர்பாக யாழ் போக்குவரத்து பொலிசாரும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்திற்கு மிடையே தோன்றிய பிணக்கை தீர்ப்பதற்கான சந்திப்பிற்கு இன்று தலைமை தாங்கி பேசும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டர். முதலில் இச்சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி மற்றும் படைத்தரப்பின் பிரதிநிதிகள் ஆட்டோ சாரதிகளின் வேண்டுகோளை ஏற்பதில் நிலவிய தயக்கத்தை அடுத்து அமைச்சரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆட்டோ சாரதிகளும் நேரடியாக யாழ் நகரின் குறிப்பான இடத்தை பார்வையிட்டதை அடுத்து பொலிசார் ஆட்டோ சாரதிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர் மீண்டும் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் கூடிய அதிகாரிகளும் ஆட்டோ சாரதிகளும் இவ் விவாதத்தை தீர்த்து வைத்தமைக்காக அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
(more…)

நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர் மக்களே தூண்களாக தாங்கி நிற்க வேண்டும்: உருத்திரகுமாரன்

tamilnational_us_april_01 நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாடு கடந்த அரசு குறித்த சிறிய விளக்கத்தை தெரிவிக்க முடியுமா? தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை சரித்திரப் பின்னணியோடு நாங்கள் பார்க்க வேண்டும். சிறிலங்கா தீவு சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மூலமும் சாத்வீகப் போராட்டத்தின் மூலமும் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முனைந்தனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் படையினரால் மிலேச்சத்தனமாக முறியடிக்கப்பட்டதோடு, இனவாதம் தலைதூக்கியதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மூலமூம் அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போனது. இதன் விளைவாகவே தமிழ்மக்களின் இந்தப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.
(more…)

மைக்கேல் ஜாக்சன்:கோடிக் கணக்கான ரசிகர்களை மகிழ்வித்தார்.ஆனால் அவருக்கு என்ன கஷ்டம் என்பதை அறிந்து அவரை யாரும் மகிழ்விக்கவில்லை.

maical-jak_thumbnail பாப்” இசை உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்நிலையில் அவரது தங்கையும் “பாப்” பாடகியுமான ஜானட் ஜாக்சன் தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- நான் சினிமா சூட்டிங்கில் இருந்தபோதுதான் அண்ணன் மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. உடனே இதை என்னால் நம்பவே முடியவில்லை. மிகவும் கலங்கிப் போனேன்.
சிறு வயது முதலே என்னை தந்தையைப் போல் வளர்த்தவர் அவர். அவரது இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் மொத்தம் 9 பேர். அப்பா இரும்பாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவர் மிகவும் கண்டிப்பானவர். யாராவது சிறு தவறு செய்தாலும் அடித்து உதைப்பார். இதனால் எங்களுக்கு அப்பாவை கண்டாலே ரொம்ப பயமாக இருக்கும்.
(more…)

‘கழுத்துக்கு கத்தியை’ வைத்து ஜனாதிபதிக்கு சூழ்ச்சி செய்யவில்லை: ஹெல உறுமய

jvpflag.gif “பிரபா கரனின் பிரிவினைவாத பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஆட்டிலறி தாக்குதல்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. இவ்வாறான சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எவ்விதமான அச்சமும் இன்றி தேர்தல்களில் போட்டியிடுகிறது. கழுத்துக்குக் கத்தியை வைத்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு நாம் சூழ்ச்சி செய்யவில்லை” என்று ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ‘நாட்டை வெற்றி கொண்டு கிராமத்தைப் பாதுகாப்போம்’எனும் தொனிப்பொருளில் மகாவலி மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கை தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அக்கட்சியின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(more…)

சூரிச் மாநகரில் மாபெரும் வீரமக்கள் தின நிகழ்வும், மாணவர்களுக்கான பரிசளிப்பும்!!

PLOTE..LOGO.jpg புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையினரால் வருடந்தோறும் ஜுலை மாதத்தில் நடத்தப்பட்டு வரும் வீரமக்கள் தின நிகழ்வுகள் எதிர்வரும் 05.07.2009 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் சூரிச் மாநகரிலுள்ள உன்ரர் அப்போல்ரன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆரம்ப நிகழ்வாக வீரமக்கள் தினத்திற்குரிய மலராஞ்சலி மற்றும் அக வணக்கம் என்பன இடம்பெறுவதுடன், இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பிரதம அதிதியாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்போரின் உரைகளும் முக்கியஸ்தர்களின் உரைகளும் இடம்பெறவுள்ளது. அத்துடன் விசேட நிகழ்வுகளாக பின்னணி இசைக்கு ஆடுதல், வினோதவுடைப் போட்டி, பொது அறிவுப்போட்டி, நாடகம், நாட்டியம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. மற்றும் அண்மையில் சுவிஸ்வாழ் தமிழ் மாணவ மாணவியர்களுக்காக தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் நடத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவியர்க்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
வேறு மேலதிக விபரங்கள் தேவைப்படின் தயவுசெய்து பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 076- 368 15 46.. 076-310 82 17.. 078 -312 43 39.. 077- 203 88 81

வீரமக்கள்தின நிகழ்வு நடைபெறும் மண்டபம்.

GemeinsSchfts Zentrum Affolten,
Bodenacker.25
8049 Zürich

நன்றி.. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் -சுவிஸ்கிளை

குழந்தையரங்க குதூகலிப்பு சிறுவர் நாடக விழா

drama0107x குழந்தையரங்க குதூகலிப்பு சிறுவர் நாடக விழா எதிர்வரும் 9 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் கல்வியியற் கல்லூரி அரங்கில் யாழ் கல்வியியற் கல்லூரியின் விழா ஏற்பாட்டாளர் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள. இவ்விழா குறித்து சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த யாழ் கல்வியியற் கல்லூரி முதல்வர் திரு யோகநாதன் கல்லூhயிpல் நிலவும் சிற்றூழியர் பதவி வெற்றிடங்களை நிரப்ப உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

நலிவுற்ற குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் இன்று விநியோகம்

kachry0107x நாட்டின் சீரற்ற நிலமைகளினால் நலிவுற்ற குடும்பங்களுக்கான நிவாரண விநியோகத்தை சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டின் கீழ் யாழ் செயலகம் இன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிவாரண பொருட்களில் ஒரு அங்கத்தவர் கொண்ட குடும்பத்திற்கு அரிசி கோதுமை மா பருப்பு சீனி மரக்கறி எண்ணெய் உட்பட மொத்தம் 14 கிலோ உணவுப்பொருட்கள் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளன. இரு அங்கத்தவர் கொண்ட குடும்பத்திற்கு 28 கிலோ உணவுப்பொருட்களும் 3 அங்கத்தவர் கொண்ட குடும்பத்திற்கு 42 கிலோவும் 4 அங்கத்தவர்களுக்கு 56 கிலோவும் 5 அங்கத்தவர் கொண்ட குடும்பத்திற்கு 70 கிலோவும் 6 அங்கத்தவர்களுக்கு 84 கிலோவும் 7 அங்கத்தவர்களுக்கு 98 கிலோவையும் 8 அங்கத்தவர்களுக்கு 112 கிலோவும் 9 பேர்களை கொண்ட குடும்பத்திற்கு 126 கிலோ கிராம் உணவுப் பொருட்களையும் விநியோகிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இந்த நிவாரண பொருட்கள் விநியோகத்தை இன்று முதலாம் திகதி முதல் ஆரம்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் அரச அதிபரை பணித்துள்ளார்.

யாழ்.தேர்தல் பணிகளுக்கு டக்ளஸ் தலைமை: வவுனியா நகர சபைக்கு ரிஷாத் பொறுப்பு

EPDP.gif யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குழுவொன்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார். 1976ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் யாழ். மேயராகத் தெரிவானார். 33 வருடங்களின் பின் மீண்டும் எமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தெரிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபைக்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு அநுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் சிலரும் இந்தக் குழுவில் அடங்குவர்.
(more…)

இலங்கை : வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் : அரசு தீர்மானம்

ANI.srilanka.gif எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தவும், அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் பொதுத் தேர்தலை நடாத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னர் வரும் ஒக்ரோபர் மாதம் தென் மாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பதவிக்காலம் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதியே உத்தியோகபூர்வமாக நிறைவடைகின்றது. 2011ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப் பிரமாணத்தை மேற் கொள்வார் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எனினும், நாட்டில் ஜனாதிபதிக்கு காணப்படும் ஆதரவு அலையை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாயின் இந்த ஆண்டில் தேர்தலை நடத்த வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய போதிலும் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான உத்தியோகபூர்வ பதவிப் பிரமாணத்தை 2011 ம் ஆண்டிலேயே மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடலின் கீழ் மின்சார கேபிள்களை அமைக்க இந்தியா இலங்கை திட்டம்

g11_s66_54677-150x138 இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த முயற்சியில் இந்தியாவிலிருந்து மின்சாரம் பெறுவதற்கென ஆசியாவிலேயே புதிய முறையிலான கடலின் கீழ் கேபிள் தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை ஆராய்வதற்கென புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் இரண்டு அயல் நாடுகளும் விரைவில் கைச்சாத்திட இருக்கின்றன. இதற்கான நகல் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றும் விரைவில் அது கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய மின்சார வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான யோசனையை ஊக்குவிக்கும் ஈரிடை திட்டமொன்றை இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே ஏற்படுத்திக் கொள்வது பற்றியும் சார்க் நாடுகளுக்கிடையே ஆராயப்பட்டு வருகிறது.
(more…)

தமது தேவைகள் கோரிக்கைகளுடன் வட்டுக்கோட்டை அந்திரான் கிராம மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்தனர்

anthiran2906c தமது தேவைகள் கோரிக்கைகளுடன் வட்டுக்கோட்டை அந்திரான் கிராம மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்தனர். வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணி அந்திரான் கிராம மக்கள் தமது தேவைகள் கோரிக்கைகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார்கள். இன்று நண்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பிற்கு அந்திரான் கிராம மக்கள் அதன் தலைவர் வெ.தேவராசா தலைமையில் வருகைதந்து அமைச்சருடன் சந்திப்பினை மேற்கொண்டனர். ஜே.157 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குள் அடங்கும் அந்நிரான் கிராமமானது 180 குடும்பங்களைக் கொண்டுள்ளதுடன் அனைவருமே வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்கள் என்பது மற்றுமோர் விடயமாகும். கடந்த நிஷா புயல் மழையின்போது பெரும் பாதிப்பிற்குள்ளான அப்பகுதியானது இன்னமும் அதன் பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பதை அக்கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே தமக்கு உடனடி தேவையாக பாதிக்கப்பட்ட தமது குடிமனைகளை கட்டவும் திருத்தவும் அதேபோல புதிதாக கழிப்பறைகளை அமைக்கவும் உதவி செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் Nதுவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையில் அதிக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு சமூகமளித்திருந்த யாழ். மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்திடம் இவ்விடயம் தொடர்பான அறிக்கையினை கோரியதுடன் விரைவிலேயே உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

யாழ். கலட்டியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு மற்றும் மரம்நாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்பு.

kaladdy2906c யாழ். சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி சமுதாயத்தினரும் ஈபிடிபியினரும் இணைந்து யாழ். மாநகரசபை எல்லைக்குள் பத்தாயிரம் நிழல் தரும் மரங்களை நாட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிகழ்வின் அங்குராப்பண வைபவம் யாழ். கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று மாலை ஆரம்பமானது. நிகழ்விற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து இடம்பெற்ற மரம் நாட்டு விழாவில் முதலாவது நிழல் தரும் மரத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் யாழ். மாநகரசபை எல்லைக்குள் மலைவேம்பு அசோக் சமண்டலை நெல்லி மரமுந்திரிகை சவுக்கு மரங்கள் அடங்கலாக பத்தாயிரம் நிழல்தரு மரங்கள் நாட்டி வைக்கப்படவுள்ளன. இன்றையநிகழ்வில் யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர்கள் ஈபிடிபி முக்கியஸ்தர்கள் கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் யாழ். சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குகொண்டனர்.

ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

maical-jak_thumbnail பொப் இசை உலகின் மன்னன் மைக்கல் ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.மைக்கல் ஜாக்சனின் உயிர் பிரியும் நேரத்தில் அவரது உடல் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்துள்ளது. பரிசோதனையின் போது அவரது வயிற்றில் வெறும் மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன. கடைசிக் காலத்தில் அவரது தலையில் முடிகள் இல்லை. செயற்கை அழகிற்காக ‘விக்’ பயன்படுத்தி வந்துள்ளார். அவரது இடுப்பு, தொடை மற்றும் தோள் பகுதிகளில் ஊசி குத்தப்பட்ட அடையாளங்கள் ஏராளமாக காணப்பட்டன. அவர் தினமும் 3 முறை போதைத் தன்மை உடைய வலி நிவாரண மருந்துகளை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன் விளைவாக அந்த அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது உடலில் அறுவைச் சிகிச்சை தழும்புகளும் நிறையவே இருந்துள்ளன. அவர் மொத்தம் 13 முறை அழகுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.அவரது உடலை ஆராய்ந்ததில் அவர் ஆரோக்கியமானவராக இருந்திருக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு ள்ளனர். தினமும் ஒருவேளை மட்டுமே அவர் உணவு உட்கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
(more…)

மொனராகலை, மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக மின்சாரம் வழங்கல்

bulbs_thumbnail இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக மொனராகலை, கல்கமுவ தேர்தல் தொகுதியில் உள்ள மடுல்ல கிராமத்துக்கு சூரிய சக்தியினூடாக இன்று (30) மின்சார வசதி அளிக்கப்பட உள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 24 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் 300 வீடுகளுக்கு இவ்வாறு மின்சார வசதி அளிக்கப்படுவதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இதன்படி மடுல்ல கிராமத்தில் உள்ள 300 வீடுகளுக்கும் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான சூரிய சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. மின்மாற்றிக் கோபுரங்கள் நிர்மாணிக்க முடியாத கஷ்டப் பகுதி கிராமங்களுக்கு சூரிய சக்தி மற்றும் மாற்று வழிகளினூடாக மின்சார வதி அளிக்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்றைய நிகழ்வில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு. டீ. ஜே. செனவிரத்ன இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

கனகரட்ணம் எம்.பியை பிரதமநீதிவான் பார்வையிட்டார்

tna_mp-kanagarathnm_thumbnail கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தை நேற்று கொழும்பு, பிரதம நீதிவான் நிஸாந்தஹப்பு ஆராய்ச்சி சென்று பார்வையிட்டார். கனகரட்ணம் எம்.பியைத் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யக் கோரும் குற்றத்தடுப்புப் பிரிவின் விண்ணப்பத்துக்கு நீதிவான் அனுமதியளித்தார் வன்னி மக்களுடன் இடம்பெயர்ந்து வவுனியா முகாமில் தங்கியிருந்த வேளை, கனகரட்ணம் எம்.பி. விசாரணைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

த.ம.வி.பு. கட்சி சார்பில் சர்வ கட்சி மகாநாட்டில் கலந்துகொள்வோரின் விபரம்

tmvp-lanka1 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் சர்வ கட்சி மகாநாட்டில் கலந்து கொள்ளும் புதிய பிரதிநிதிகளின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரான யூடி தேவதாசன் ,மற்றும் அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான மொகமட் மிஹிலார் மொகமட் ஹன்தஷிர் (ஆசாத் மௌலானா) ஆகியோர் சர்வ கட்சி மகாநாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொள்ளவுள்ளனர். ஏற்கனவே சர்வ கட்சி குழுவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் இடம் பெற்றிருந்தார்.அவர் அக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே அவரது இடத்திற்கு யூடி தேவதாசன் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு

icrc-11 சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களும் சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றோ, அன்றி அவர்களது விபரங்களை வெளியிடவோ, சிறீலங்கா அரசு மறுத்து வருகின்றது

 Page 1 of 473  1  2  3  4  5 » ...  Last »