Feb
8
2010
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ ரகசியங்களை வெளியிட்டார் , நாட்டின் ஜனாதிபதி உட்பட அவரது குடும்பத்தினரை கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற முனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்படவுள்ளார் என பரவலாக பேசப்பட்டுவந்த நிலையில் ரஜகீத மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டுள்ளமை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாட் சமரசிங்கவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக சில்வா அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல்கள் தொடரும்