பொலிஸ் பதிவுக்கு அடுத்த இலக்கு மலையக மக்களே என்கிறார் இமாம்
மேல் மாகாணத்தில் வதியும் வடக்கு, கிழக்கு தமிழர்கள் பொலிஸில் பதிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், அடுத்ததாக மலையக மக்களை பொலிஸார் இலக்கு வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இமாம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பொலிஸ் பதிவு மற்றும் சோதனை, தேடுதல் நடவடிக்கைகளினால் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் துன்பமடைகின்றனர். மேல் மாகாணத்தில் தங்கியுள்ள வடக்கு, கிழக்குத் தமிழர்கள் பொலிஸில் பதவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், அடுத்ததாக மேல் மாகாணத்தில் தங்கியுள்ள மலையக மக்களை பொலிஸார் பதிவுகளுக்குட்படுத்தவுள்ளனர். பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கைகளினால் தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தமிழ், முஸ்லிம் மக்களை மட்டும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.
(Read more . .)